Tuesday, 22 November 2011
மச்சாளை விடு தூதாய்!!!!
ஹாய் மச்சாள் ஹாய் மச்சாள்
எப்படி சுகம்
வீட்டிலயும் அம்மா அப்பா
எப்படி சுகம்
அக்கா எங்கே ரெண்டு நாளாய் காணலியே
வெள்ளிக் கிழமை கோயிலுக்கும் வரவில்லையே
அவளை நான் காணத நாட்களிலே
அரைவாசியாய் தேய்ந்து போறேன் நிலாப் போலே
எங்கே அவள் என்னவள்
நீ சொல்லிப் போவாயா......
(ஹாய் மச்சாள் ஹாய் மச்சாள்.....
அக்காவிடம் சொல்லிவை
அத்தான் ரொம்ப நல்லம் என்று – அவள்
அடிக்கடி என்னை முறைக்கிறாள்
அது வேண்டாம் என்று
கடிதம் கடிதமாய் எழுதினேன் - தூங்காமலே
அதை கிழித்துப்போட்டு எறிகிறாள் படிக்காமலே
நாயென்று ஒருநாள் என்னைப் பேசிவிட்டாள்
அது கூடப் பறவாயில்லை பொறுத்துக்கொண்டேன்
அப்பாவிடம் சொல்வேன் என்று மிரட்டிவிட்டாள்
அது கேட்ட நாள் முதலாய் தூக்கமில்லை
உனக்குமா என்னைப் பார்க்க பாவமாயில்லை
ஹெல்ப் பண்ணு உன்னை விட்டால் யாருமேயில்லை
(ஹாய் மச்சாள் ஹாய் மச்சாள்......
அவளேட ஸ்கூல்பாக்கின் நுனியில் ஒன்றை
நோகாமல் பிடுங்கி நான் வைத்திருக்கேன்
மை முடிந்து அவளெறிந்த பேனா ஒன்றை
ஆசையோடு எடுத்து நான் வைத்திருக்கேன்
அவளைத் தவிர வேறொருத்தியை நினைத்ததில்லை
அவள் என்னவென்றால் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை
கவிதை எல்லாம் அவளைப் பற்றி எழுதித் தந்தேன்
கண்டபடி எனைப்பிடித்துப் பேசிவிட்டாள்
சீதனமாய் ஒரு சதமும் வாங்க மாட்டேன்
கல்யாணச் செலவைக்கூட நானே தான் பார்த்துக்கொள்வேன்
அவள் இல்லாமல் நானினிமேல் வாழமாட்டேன்
எங்களை சேர்த்துவை உன்னை நான் மறக்கமாட்டேன்
(ஹாய் மச்சாள் ஹாய் மச்சாள்......
ஹா...ஹா...ஹா,
எப்புடீ?
Sunday, 13 November 2011
இனிக்கும் வாழ்க்கை உனக்கே உனக்கே
முயற்சி உடை மனிதா
முயன்று தடையை உடை
எழிச்சி நடை நடந்தே
உலகை புகழ்ச்சி பாடவை
வாழ்வினை வென்றவரே வாழ்ந்தார் – வரலாற்றில்
மாண்டபின்பும் அவர் வாழ்வார்
வெற்றியினை முயன்று எட்டிவிடு – வரலாறே
போற்றும் உன்னை மண்டியிட்டு
திட்டமிட்டுத் தொடங்க வேண்டும் - வெற்றி
கிட்டும்வரை உழைக்க வேண்டும்
முயன்றால் எதிலும் தோல்வியில்லை - முதலில்
தோற்பினும் பிறகு வெற்றி தூரமில்லை
சாதகமான சந்தர்ப்பங்கள் எதுவும்
வாய்ப்பதில்லை தானாய் முன்னேற
வாய்ப்பதனை உனக்கு வாய்ப்பாய்
ஆக்கினால் எதுவும் சாத்தியமே
இலகுவில் கிடைப்பது நிஐமல்ல – யாரையும்
ஏமாற்றிப் பெறுவது நிரந்தரமல்ல
நேர்மைவழி நின்று ஊக்கமாய் முயன்றால்
இனிக்கும் வாழ்க்கை உனக்கே உனக்கே
Tuesday, 1 November 2011
அந்த இரவு தந்த பயம்
பாதி இருளில் ஆரண்யம்
மதிமயங்க வைத்தததன் லாவண்யம்
கத்தும் குருவிகளில் எனை மறந்து
நறுமலர்கள் தனை நுகர்ந்து
நெடுந்தூரம் சென்றேன் வழி மறந்து
தூரத்து சங்கீதமென் வேகத்தைக் கூட்ட
விர்றென்று தேடி இடம் மாறி - நான்
விரைந்த இடம் ஒரு காடா?
இல்லை இல்லை அதுவொரு சுடுகாடு
தேகச்சூடு தணிந்து குளிர் வீசியது
நரம்புகள் விறைத்து முடிகள் சிலிர்த்தன
சுட்ட பிணங்களின் அணையாத் தணல்களின்
நெருப்பும் புகையும் கண்களைத் துருத்தின
முழுக்க எரிந்து முடியாத ஒன்றை
நாயோ நரியோ ஏதோ ஒன்று
இழுத்துக் கொண்டு எனைக்கண்டு ஓடியது
விறைத்து நெஞ்சு துடிக்கத் திரும்பி ஓடினேன்
எடுத்த தாகம் தணிக்கத் தண்ணீர்
கிடைக்க இடையில் கிணறு ஒன்று
கிட்டினேன் எட்டிப் பார்த்தேன்
மண்டியிட்டு உருவமொன்று அழுதுகொண்டிருந்தது
ஓடிப்போய்த் துலைவோம் என்றில்லாமல் அதன்
தோளைத் தொட்டு மெல்லத் திருப்பினேன்
ஓலத்தை நிறுத்தி மெல்லமுகம் நிமிர்த்தி முறைத்தது
ஆவென்று கத்தியும் வாய் எனக்குத் திறக்கவில்லை
கோரப்பற்களில் சொட்டும்குருதி துளித் துளியாய்
கொடும்நெருப்பில் எரியும் பந்து விழிகளாய்
உரிந்த தோல்களின் ஊடே ஊனும் ஒழுக
புழுக்களும் பூச்சிகளும் ஊர்ந்தன உடம்பில்
இருந்த மாத்திரத்தில் அந்தரத்தில் எழுந்து
விரித்த வாயோடு வந்தது என்னை விழுங்க
திரும்பி எடுத்த ஓட்டம் திரும்பத்திரும்ப ஓடியும்
அடுத்த அடியை எடுத்துவைக்க முடியல
கிட்டவந்த அதற்கு எட்டியுதைக்கக் கால்நீட்டி
உறுண்டு விழுந்தேன் கட்டிலின் மீதிருந்து
எழுந்து போய்ப் படுத்துக்கொண்டேன்
மீண்டும் போர்வையைப் போர்த்திக்கொண்டு
Subscribe to:
Posts (Atom)