Friday, 30 September 2011
சாவதில் இன்பம்
நான் நல்ல மாடு
எனக்குப்போதும் ஒரு சூடு
காதலிச்சுப் பட்டபாடு
வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு
இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால்
வடிகிறது ரத்தம் விழிகளில்
அவளுக்கு நான்
ஆரோ ஆகிப் போன நிமிடத்தில்
மூளைக்குள் பல காகங்கள் ஒன்றாகக் கத்தின
மனம் ஊளையிட்டது
உள்ளுக்குள் உண்மை ஓலமிட்டது
நரக வேதனை கிடைத்த போதுதான் தெரிந்து கொண்டேன்
காதலும் ஒரு பாவமென்று
என் கவிதைகளே
என் உதடுகளை காயப்படுத்திய சோகம்
பிளாஸ்டிக் மரத்துக்கு தண்ணி ஊத்தி
வளரும் என்று இருந்த நான் பாவம்
ஆசை உறுட்டி கண்ணில் வைத்து
விரதம் முடிக்க கூவி அழைத்தேன்
அவளோ செவிட்டுக் காகம்
தேவதைக்கு ஒப்பிட்டு
தெரு நாயைக் காதலித்து
வாங்கிய கடியினால் இதயமெல்லாம் ஊசிகள்
நிலவுக்கும் மலருக்கும் அவள் வெகு தூரம்
அதை அறியாமல் எழுதிய நான் ஒரு மூடன்
தாகம் என்று போன எனக்கு
கழுத்தையே அறுத்து விட்டாள்
காதல் என்ற வார்த்தையிலே
கல்லறையைக் கட்டிவிட்டாள்
வீழ்வதில் இன்பம் அருவியில் மட்டுமாம்...
வீழ்வதில் இன்பம் அருவியில் மட்டுமாம்
வைரமுத்து...
சாவதில் இன்பம் காதலில் மட்டுமா?
ம்.... போகட்டும்
காதல் எனது பாவம்
முடிவு எனக்கு பாடம்
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
கவிதை நன்று நண்பரே...
உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.
உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.
உங்கள் ஊக்கம் எனக்கு உற்சாகம் அளிக்கும்.
நான் நல்ல மாடு
எனக்குப்போதும் ஒரு சூடு
காதலிச்சுப் பட்டபாடு
வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு
eduu super....
Thanks siraaj
Thanks siraaj
Post a Comment