Monday, 25 November 2013

காதல் கடந்த காலம்






அப்படியும் இப்படியுமாக்
காலங்கள் மாறியபோதும்
சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும்
செத்துவிடவில்லை எனக்குள்

வீணாய்ப் போன உன்னை காதலித்து
காணாமல் போன என் கற்பனைகள் கோடானுகோடி
நோகாமல் சொல்லிச் சென்றாயே
'நீ யாரோ நான் யாரோ'

கரைக்கு அடித்துக் கலைத்த போதும்
அலை கடலைத்தேடி திரும்ப ஓடும்
என்னை வெறுத்து நீ ஒதுக்கிய போதும்
உன் நினைவுகள் மீண்டும் வந்தே வதைக்கும்

நீ தந்தது தானே என்று
சோகத்தையும் சுகமாய் ஏற்றுக்கொண்டேன்
ஆறுதலாய் ஆயிரம் இருந்தாலும்
ஏனோ இன்னும் ஏக்கத்திலே வாழ்கின்றேன்

உன்னோடு நான் சேராத போதும்
என் காதல் தெய்வீகமானது
உன்னோடு நான் சேராததால் தான்
தெய்வங்களே வீணானது

என் காதலில் என்னை தோற்கடித்து
அப்படி என்னத்தை நீ கண்டாயோ
உதாசீனப் படுத்தியது சரியா என்று
நிதர்சனமாய் நீயும் உணர்ந்திருப்பாய் இன்று

உனக்காய் எழுதிய கவிதைகள் துணையாக
இருக்கிறேன் இன்னும் உயிரோடு தனியாக
அடிக்கடி உன்னை நினைப்பதால் தானோ
துடிக்குது இன்னும் எனக்குள்ளே ஏதோ....





4 comments:

Yaathoramani.blogspot.com said...

மனம் கவர்ந்த அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

sathees said...

நன்றி அண்ணா.

Anonymous said...

வணக்கம்
மனதை கவர்ந்த கவி வரிகள் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

sathees said...

நன்றி ரூபன்

Post a Comment