காற்றிலே
மேகம் தானே
கலைந்து
தான் போவது போலே
கானலின்
நீராய் நீயும்
போனது தானோ வாழ்க்கை.....
அன்று ஏனோ அந்த அவசரம்
இன்று தானே வந்த சமரசம்
கொஞ்சம்
பொறுத்திருந்தால்
என்னை நினைத்திருந்தால்
எதற்கு
இந்த சாராம்சம்
எதனால்
இந்த போராட்டம்
நீ இழந்தவற்றில்
ஒன்றாக
நானும் இருக்கேனா
நீ பெற்றதிலே இல்லாது
நானும்
போனேனா???
நீ ஏதுமில்லை
எனக்காருமில்லை
என்றே நீயும் ஆனாயேய்
இது போதவில்லை
நீ சாகவில்லை
என்றே வீழ்த்திச் சென்றாயே..