பூக்களின் நறு மணமும்
வண்டுகளின் ரீங்காரமும்
நிலவின் குளிர்ச்சியும்
நீ விட்டு போன
இடத்தை நிரப்ப
போதுமாயில்லை...
எத்தனையோ தடவை
முயன்று
பார்த்து விட்டேன்
இன்னும் கூட
நான் வெறுமையாக
தான்
இருக்கின்றேன்..
என்னோடு நீ
இல்லாததால்
தூரப் போகப் போக
வாசம் கூடும்
அதிசயப் பூ
நீ
காணாத் தூரம்
போனாலும்
காண்கின்ற
இடமெல்லாம்
நீ
ஒவ்வொரு நாளுமே
உன் நினைப்பு
மறக்கவே முடியாமல்
என் தவிப்பு
என் உயிர் மூச்சே....
நான் இன்னமும்
பிணமாகத் தான்
வாழ்கின்றேன்...
என்னோடு
நீ இல்லாததால்....