அன்பே நீ எருமை மாடு
மேலே மழை பெய்தது போலே
போனால் போனால் ஆகுமா
நீ வெறுத்தால் என் காதல்
பொய்த்துப் போகுமா
உன் மேலே நான் வைத்த ஆசை - அது
நீ போன கோவிலின் மணி ஓசை
உன் செவிதனை சேராமல் போய்விடுமா
என் மனம்தனை ஆறாமல் செய்திடுமா
நானும் தான் கடவுளை தேடினேன்
என் காதல் மெய்ப்பட வேண்டினேன்
நான் என்ன நயன் தாராவையா கேட்டேன்
நாசமாய்ப் போன உன்னைத்தானே கேட்டேன்
என்னை ஏன் அவன் தண்டித்தான்
உனைச் சேராமல் செய்வித்தான்
காதலை நான் வெறுக்கவா - இல்லை
கடவுளே இல்லையென்று நான் மறுக்கவா
நான் இன்னும் நானாகவே இருக்கவா
இல்லை எதிர் காலத்திலே
எனை நீ வெறுத்ததற்காய்
உனை வருந்திடச் செய்திடவா?????