Friday 1 November 2013

சொன்னது சரிதானா?





பாரதி யார்?

தமிழ் கூறும் நல்லுலகே
பெருங்கவியென்று கொண்டாடும் பாரதியே
நாட்டுக்கும் நங்கையர்க்கும் விடுதலை கேட்டு
பாட்டுப் பாட்டாய் முழங்கியவரே

வரலாறு என்றொரு பாடமே
இருக்கவில்லையா  
நீங்கள் படித்த காலத்தில்
இல்லை
பொது அறிவே பஞ்சமா உங்களுக்கு

இலங்கையென்னும் தீவினிலே
ஈழத்தமிழ் இனமென்று
இனமான உணர்வு கொண்ட
தமிழ்க்குடி ஒன்று இருக்குதையா

இது கீர்த்தி கொண்ட ஆண்ட பரம்பரை
வீரமும் தியாகமும் இதன் வரலாறு

செந்தமிழ் நாடென்று சொன்னாலே
தேன் வந்து பாயுமாமே உங்கள் காதில்

தமிழனுக்கோர் நாடுவேண்டி
தன்னுயிரை ஈகம் செய்யும்
மறத்தமிழினம் இத்தீவில்
இன்று நேற்று வந்ததல்ல

சிங்களத் தீவினிற்கோர் பாலமமைப்போமென
எங்கணம் நீங்கள் சொல்லலாம்
சிங்களப் பேரினவாதிகளுக்கு முன்னதாகவே
இலங்கையை சிங்களத் தீவென்று நீங்களும்
சென்னது சரிதானா

எங்கள் இனத்தையே இழிவு செய்த
மமதைக்காரர் உங்களைப்போய்
மகாகவி என்று நாமும்
சொல்வதும் சரிதானா?



1 comment:

kaandee said...

paarathiyaar ulaka arivatra moodan enru eppotho theriyum . aanaalum avarin thamizh pulamaiyai mechcha\ththaan vendum . kavithai nanru.

Post a Comment