Tuesday 26 November 2013

போடாத கடிதம்





என்னைக் காதலித்தவளுக்கு
என்னை மன்னிக்கச் சொல்லி
வருத்தமுடன்
எழுதிக் கொள்வது
உன்னை முன்பு
காதலித்து
பிறகு கைவிட்டவன்

ஆறாத காயங்களும்
மாறாத
அவமானங்களும்
என்னால் உனக்கு
ஏராளம்
தலையனைக்குள்
முகம் புதைத்து
நீ அழுத இரவுகளுக்கு
நானே தான் காரணம்

ஊர் குத்திய முட்களும்
நீ அழத பொழுதுகளும்
அறியாமற் போய்விட்டேன்
அன்று
அறிந்த போது கனக்கிறது
நெஞ்சு
சும்மா இருந்த உன்னை
காதலெனும் ஆசைகாட்டி
பாதி வழியில் கைவிட்டேன்
பாவி நானடி
வேறென்ன சொல்ல

அறிந்தே யாருக்கும்
துரோகங்கள் செய்ததில்லை
சத்தியமாய் சொல்கிறேன்
நான் வேண்டுமென்றே
செய்யவில்லை
உன்னைத்தான் காதலித்தேன்
உண்மையாயத் தான் காதலித்தேன்
கோபமும் பிடிவாதமும்
என்னையே மிஞ்சி விட்டன

என்னை வேண்டாமென்றே
இருந்திருப்பாய் என இருந்தேன்
அந்த நினைப்பில் தான்
உன்னையும் தூக்கி எறிந்தேன்
உன் காதலை நான்
உணர்வதற்கு தவறிவிட்டேன்

என்னால் நீ
அழுதவைகள்
உண்மையிலே எனக்குத்
தெரியாது
ஒரு கண்ணீரில்
காதலைத் தொடங்கி
உன்னைக் கண்ணீரிலேயே 
முடித்து விட்டேன்

உன்னை எனக்கு
உணர்த்தாமல் போனது
உன் குற்றமா
இல்லை
உன்னை உணர்வதற்குக் கூட
நினைக்காமல் போனது
என் குற்றமா
எனினும்
நீ இழைத்தது குற்றமெனில்
நான் புரிந்தது
துரோகம்

இத்தோடு என்னை
மன்னிப்பாய் என்பதற்காய்
எழுதவில்லை இதனை
உண்மை தெரிந்த பின்பும்
இதைக்கூட நான்
செய்யவில்லை எனன்றால்
என் மனமே
கொல்லும் என்னை

உன்னைப் பிரிந்ததினால்
இழப்பு எனக்கெனினும்
நல்லதோர் வாழ்க்கை
உனக்கமைந்து விட்டதில்
மகிழ்ச்சி

இத்துடன் இதனை முடிக்கின்றேன்
இன்னும்
உனக்கு
பழைய புண்ணை
கிளறிவிட ஆசையில்லை.



1 comment:

Post a Comment