நீ இனி காற்றாக மாறியும் பயனில்லை
காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை
நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை
நான் செவிடானேன் நீ கூவுகின்ற வேளை
நான் உன்னை மட்டும் நேசிக்கவில்லை
நீ சுவாசித்த காற்றைக்கூட காதலித்தேன்
அடங்கிய அலையில் நுரைகள் மிச்சம்
தொடங்கிய காதலில் கவிதைகள் மிச்சம்
விலகி நான் வந்தபோதும் விட்டுவிடவில்லை உன் நினைவை
அழகி படம் பார்த்து விட்டு அழுது விட்டேன் இது உண்மை
தீண்டிய நொடியினில் வாடிய செடியான நம் காதல்
ஆண்டவன் கிறுக்கிய அழகான பொய் தானோ?
2 comments:
nice1..really liked it... keep goin..waiting for more..
கவிதை நன்று நண்பரே...
Post a Comment