Friday 30 September 2011

சாவதில் இன்பம்





நான் நல்ல மாடு
எனக்குப்போதும் ஒரு சூடு
காதலிச்சுப் பட்டபாடு
வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு

இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால்
வடிகிறது ரத்தம் விழிகளில்

அவளுக்கு நான்
ஆரோ ஆகிப் போன நிமிடத்தில்
மூளைக்குள் பல காகங்கள் ஒன்றாகக் கத்தின
மனம் ஊளையிட்டது
உள்ளுக்குள் உண்மை ஓலமிட்டது
நரக வேதனை கிடைத்த போதுதான் தெரிந்து கொண்டேன்
காதலும் ஒரு பாவமென்று

என் கவிதைகளே
என் உதடுகளை காயப்படுத்திய சோகம்
பிளாஸ்டிக் மரத்துக்கு தண்ணி ஊத்தி
வளரும் என்று இருந்த நான் பாவம்

ஆசை உறுட்டி கண்ணில் வைத்து
விரதம் முடிக்க கூவி அழைத்தேன்
அவளோ செவிட்டுக் காகம்

தேவதைக்கு ஒப்பிட்டு
தெரு நாயைக் காதலித்து
வாங்கிய கடியினால் இதயமெல்லாம் ஊசிகள்

நிலவுக்கும் மலருக்கும் அவள் வெகு தூரம்
அதை அறியாமல் எழுதிய நான் ஒரு மூடன்

தாகம் என்று போன எனக்கு
கழுத்தையே அறுத்து விட்டாள்
காதல் என்ற வார்த்தையிலே
கல்லறையைக் கட்டிவிட்டாள்

வீழ்வதில் இன்பம் அருவியில் மட்டுமாம்...
வீழ்வதில் இன்பம் அருவியில் மட்டுமாம்
வைரமுத்து...
சாவதில் இன்பம் காதலில் மட்டுமா?

ம்.... போகட்டும்
காதல் எனது பாவம்
முடிவு எனக்கு பாடம்

6 comments:

Anonymous said...

கவிதை நன்று நண்பரே...

sathees said...

உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.

sathees said...

உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.
உங்கள் ஊக்கம் எனக்கு உற்சாகம் அளிக்கும்.

Unknown said...

நான் நல்ல மாடு
எனக்குப்போதும் ஒரு சூடு
காதலிச்சுப் பட்டபாடு
வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு

eduu super....

sathees said...

Thanks siraaj

sathees said...

Thanks siraaj

Post a Comment