Tuesday 1 November 2011

அந்த இரவு தந்த பயம்




பாதி இருளில் ஆரண்யம்
மதிமயங்க வைத்தததன் லாவண்யம்
கத்தும் குருவிகளில் எனை மறந்து
நறுமலர்கள் தனை நுகர்ந்து
நெடுந்தூரம் சென்றேன்  வழி மறந்து

தூரத்து சங்கீதமென் வேகத்தைக் கூட்ட
விர்றென்று  தேடி இடம் மாறி - நான்
விரைந்த  இடம் ஒரு காடா?
இல்லை இல்லை அதுவொரு சுடுகாடு

தேகச்சூடு தணிந்து குளிர் வீசியது
நரம்புகள் விறைத்து முடிகள் சிலிர்த்தன
சுட்ட பிணங்களின் அணையாத் தணல்களின்
நெருப்பும் புகையும் கண்களைத் துருத்தின

முழுக்க எரிந்து முடியாத ஒன்றை
நாயோ நரியோ ஏதோ ஒன்று
இழுத்துக் கொண்டு எனைக்கண்டு ஓடியது
விறைத்து நெஞ்சு துடிக்கத் திரும்பி ஓடினேன்

எடுத்த தாகம் தணிக்கத் தண்ணீர்
கிடைக்க இடையில் கிணறு ஒன்று
கிட்டினேன் எட்டிப் பார்த்தேன்
மண்டியிட்டு உருவமொன்று அழுதுகொண்டிருந்தது

ஓடிப்போய்த் துலைவோம் என்றில்லாமல் அதன்
தோளைத் தொட்டு மெல்லத் திருப்பினேன்
ஓலத்தை நிறுத்தி மெல்லமுகம் நிமிர்த்தி முறைத்தது
ஆவென்று கத்தியும் வாய் எனக்குத் திறக்கவில்லை

கோரப்பற்களில் சொட்டும்குருதி துளித் துளியாய்
கொடும்நெருப்பில் எரியும் பந்து விழிகளாய்
உரிந்த தோல்களின் ஊடே ஊனும் ஒழுக
புழுக்களும் பூச்சிகளும் ஊர்ந்தன உடம்பில்

இருந்த மாத்திரத்தில் அந்தரத்தில் எழுந்து
விரித்த வாயோடு வந்தது என்னை விழுங்க
திரும்பி எடுத்த ஓட்டம் திரும்பத்திரும்ப ஓடியும்
அடுத்த அடியை எடுத்துவைக்க  முடியல

கிட்டவந்த அதற்கு எட்டியுதைக்கக் கால்நீட்டி
உறுண்டு விழுந்தேன் கட்டிலின் மீதிருந்து
எழுந்து போய்ப் படுத்துக்கொண்டேன்
மீண்டும் போர்வையைப் போர்த்திக்கொண்டு 

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

திகில் கனவு!

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Post a Comment