Sunday 30 October 2011

காதலாகி கசிந்து......




               "என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் தோல்விகளையும் வேதனைகளையும் மட்டுமே சந்தித்து வந்திருக்கிறேன். எனக்கு நீ கிடைத்ததை மிகப்பெரிய ஆறுதலாக நினைக்கிறேன். இனிமேல் நீ தான் என் வாழ்க்கையில் எல்லாமே. நீ இல்லாத என்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். உன்னால் கிடைக்கும் இந்த சந்தோஷம் எப்போதுமே நிரந்தரமாக இருக்க வேண்டும்."
      - அரவிந்தன்

        "நான் உங்களுக்காகப் பிறந்தவள். உங்களோடு வாழ்வதில்தான்
என்னுடைய வாழ்கையின் அர்த்தமே இருக்கிறது. இனியும் நீங்கள் கவலைப்பட்டால் நான் வாழ்வதில் பயனில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது நீங்க மட்டும் தான். உங்களின் நிழலாக எப்போதுமே நான் இருப்பேன். இது சத்தியம்."
      - தர்ஷினி

       "என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் தோல்விகளையும் வேதனைகளையும் மட்டுமே சந்தித்து வந்திருக்கிறேன். எனக்கு நீ கிடைத்ததை மிகப்பெரிய ஆறுதலாக நினைக்கிறேன்.
இனிமேல் நீ தான் என் வாழ்க்கையில் எல்லாமே. நீ இல்லாத என்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். உன்னால் கிடைக்கும் இந்த சந்தோஷம் எப்போதுமே நிரந்தரமாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் தர்ஷினியிடமும் சொன்னேன். ஆனால் அவள் என்னை ஏமாற்றி விட்டாள். நீயும் என்னை ஏமாற்றி விடாதே."
       - அரவிந்தன்

       "என்னாலும் நீங்க இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாமல் இருக்கிறது. நானும் நீங்களும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது இறைவன் இட்ட நியதி. உங்களை எனக்கு தந்த கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லனும்.  எங்களை இனி எந்த சத்தியாலும் பிரிக்க முடியாது. அரவிந்தன், நான் வாழ்ந்தால் அது உங்களேடு தான். இல்லாவிட்டால் சாவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை."
      - மாதவி

       "என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் தோல்விகளையும் வேதனைகளையும் மட்டுமே சந்தித்து வந்திருக்கிறேன். எனக்கு நீ கிடைத்ததை மிகப்பெரிய ஆறுதலாக நினைக்கிறேன். இனிமேல் நீ தான் என் வாழ்க்கையில் எல்லாமே. நீ இல்லாத என்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். உன்னால் கிடைக்கும் இந்த சந்தோஷம் எப்போதுமே நிரந்தரமாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் தர்ஷினியிடமும் சொன்னேன் மாதவியிடமும் சொன்னேன். ஆனால் அவர்களெல்லாம் என்னை ஏமாற்றி விட்டார்கள். நீயும் என்னை ஏமாற்றினால் என் நிலமை என்னவாகும் என்று எனக்கே தெரியாது.'
      - அரவிந்தன்

      "அவர்கள் கொடுத்து வச்சது அவ்வளவு தான். அரவிந், உம்மை பற்றி நல்லாப் புரிஞ்சு கொண்ட பிறகு தான் நான் உம்மை லவ் பண்ண தொடங்கினான். உம்முடைய நல்ல மனசு எனக்கு பிடிச்சிருக்கு. எல்லோருக்குமே கடந்த காலம் கறைபடிஞ்சதாய் தான் இருக்கும்.
இனியும் நீர் உமது இறந்த காலத்தைப் பற்றி கவலைப் படக்கூடாது. நீர் எனக்காக நான் உமக்காக."  
       - ரஞ்சனி

       "என் வாழ்க்கையில் இதுவரைக்கும் நான் தோல்விகளையும் வேதனைகளையும் மட்டுமே சந்தித்து வந்திருக்கிறேன். எனக்கு நீ கிடைத்ததை மிகப்பெரிய ஆறுதலாக நினைக்கிறேன். இனிமேல் நீ தான் என் வாழ்க்கையில் எல்லாமே. நீ இல்லாத என்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது. இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். உன்னால் கிடைக்கும் இந்த சந்தோஷம் எப்போதுமே நிரந்தரமாக இருக்க வேண்டும். இதைத்தான் நான் தர்ஷினியிடமும் சொன்னேன் மாதவியிடமும் சொன்னேன் ரஞ்சனியிடமும் சொன்னேன். ஆனால் அவர்களெல்லாம் என்னை ஏமாற்றி விட்டார்கள். நீயும் என்னை ஏமாற்றிவிடாதே."
       - அரவிந்தன்

       "நல்ல பெடியன். ஒழுங்காத் தான் இருந்தவன். இப்ப கொஞ்ச நாளாய்தான் இப்படி. யாரைப் பார்த்தாலும் இதையே செல்லிக் கொண்டு திரியிறான். ம்... எல்லாம் அவரவர் தலையெழுத்து."
      -  ஒரு வழிப்போக்கர்

No comments:

Post a Comment