நான் நானாக இருந்தேன்
உன்னை நான் சந்தித்தேன்
நான் நீயாக ஆனேன்
சில காலம் கழித்து
நீ நானாக ஆனாய்
அதையும் நீயே சொன்னாய்
இன்று
நீ என்னை கழித்து ஒதுக்கிவிட்டாய்
இன்னும் நீ
நீயாகவே இருக்கிறாய்
ஆனால் நான் தான்
ஏதோவாகிப்போனேன்
2 comments:
அருமையான கவிதை. நீண்ட இடைவெளியின் பின் கவிதை மணம் பரப்புகிறது. கவிஞன் தூங்குவதில்லை . கவிதை தயங்குவதில்லை. தொடரும் கவிதைகளுக்கும் இணைந்தே வாழ்த்துகள்
Post a Comment