Monday 21 October 2013

எட்டாப்பழம்





என் இருதயம் ஒருகணம்
இடம்மாறித் துடித்தது
உண்மையில் நீ அழகாகத்தான் இருந்தாயா
இல்லை என் பார்வைக்கு மட்டும்
அப்படியாய்த் தெரிந்தாயா

தடுமாறி விட்டேன் ஒருதரம்
பார்வையில் என்ன தடிகளா எறிந்து சென்றாய்

உன் வனப்பென்ன இடை வளைப்பென்ன
உடல் வடிப்பென்ன நடை எடுப்பென்ன
முகச் செழிப்பென்ன முத்துப்பல் சிரிப்பென்ன
இலக்கியங்கள் எல்லாம் உன்னைத்தான் பாடினவோ

என்னை உச்சுக்கொட்ட வைத்து
நாவில் எச்சில் சொட்டவைத்தாயே

என்ன இது சோதனை
நான் முந்திவிட்டேனா - இல்லை
நீ பிந்திவிட்டாயா

நல்லவேளை இப்போது
என்மனைவி அருகிலில்லை
அண்டை வீட்டுக்காரி சிரித்தாலே
சண்டைக்கு வருவாள் ராட்ஷசி

உன்னை நான் இமைக்காமல்
அங்கம் அங்கமாய் ரசித்தது
அவளுக்கு மட்டும் தெரிந்தால்
என் மண்டையைத்தான் அடித்து உடைப்பாள்

நானெரு நல்ல ரசிகன்
கழுதையின் வாலிலும் அழகைக் காண்பவன்
அப்படி இருக்க - இப்படி
ஒட்டுமொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்த
உன்னில் கண்ணை மேயவிட்டால்
மனம் எப்படி பொறுக்கும்

நீ எட்டாத பழம் தான்
சீ.... சீ.... புளிக்கும் என்று சொல்ல
பொய் எனக்கு வருகுதில்லை





No comments:

Post a Comment