Sunday 22 February 2015

விதி இவ்வளவு....




நீ
எழும்பிப் போன
எந்தவெரு காலையும்
உனக்கு சொல்லியிருக்காது
உன் விடியலுக்காய்
ஒருத்தன்
காத்திருந்தான் என்று

நீ
கடந்து சென்ற
கடைசி சாலை கூட
உனக்கு நினைவிலிருக்காது
ஆனாலும் அது சொல்லும்
அதன் கடைசியில் ஒருத்தன்
உனக்காக காத்திருந்தான் என்று

பசிக்காக
நீயும் சாப்பிட்டிருப்பாய்
ஆனால்
யார் உனக்கு சொல்லியிருப்பார்
உனக்காக ஒருத்தன்
பட்டினியாய் கிடந்தான் என்று

யார் யாரோ மீதெல்லாம்
நீ அன்பு காட்டும்போது
உன் அறிவுக்கு எட்டியதா
உன் மடிமீது கிடந்து
ஆராரோ கேட்க
ஒருத்தன் இங்கே
துடிக்கிறான் என்று

வசதிக்காய்
நீ உன் வாழ்க்கையை
அமைத்துக்கொண்டு
விதி அவ்வளவே என்றாலும்
உன்னால் வீணான வாழ்வதனை
ஒருத்தன் ஏற்றுக்கொண்டான்
விதி இவ்வளவே என்று.



No comments:

Post a Comment