Wednesday 12 August 2015

கடவுளிடமே காசில்லை......







என் துயரங்கள்
சிலருக்கு வெற்றிடமாகவும்
மற்றோர்க்கு
வேறிடமாகவும்
இருந்து விட்டு போகட்டும்

எனக்குள்ளே கருவாகிப்
பின்பு தானாய்க்
கலைந்து போன
என் சில
கவிதைகளைப் போலவே

இங்கு
விதைக்கப் பட்டவையெல்லாம்
அங்கிருந்தே
கொடுக்கப் பட்டிருக்கின்றன
கொடுத்ததை எடுத்து
விதைத்தவன் தான் பாவம்

வளர்ந்தவைக்கு இருந்த
தண்ணியை ஊத்தி
தாகத்தில் அவனே
செத்துத்தான் போனான்

ஊரெல்லாம் கோயிலாம்
உல்லாசமாய் ஊர்வலமாம்
திருவிழா வந்து விட்டால்
தேரேறித்தான் தீருவானாம்

பாரெல்லாம் ஆழுவானாம்
பரந்தாமன் எனும் பேருடையானாம்
ஆனாலும் இந்த
ஊழியனுக்கு கொடுக்கத் தான்
அவனிடமும் காசில்லையாம்.

ஆக
என் துயரங்கள் எனக்கு மட்டும்
துயரங்களாக
இருந்து விட்டுப் போகட்டும்
சிலர்க்கு வெற்றிடமாயும்
மற்றோர்க்கு வேறிடமாயும்....



1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பாவம் அவர் என்ன செய்வார்...?

Post a Comment