Tuesday, 22 October 2013
எண்ணிப்பார் மனிதா நீ.
ஒரு நாளில் வாடும் பூவுங்கூட
வாசம் வீச மறப்பதில்லை
பல கோடி ஆண்டு போன பின்பும்
ஆழக்கடலும் ஓய்வதில்லை
ஏனோ மானிடா!
அஞ்சி அஞ்சி ஓடுகிறாய் - நீ
பிறந்த காரணம் என்னானது
உன்னாலே பலருக்கு
வாழ்க்கை வீணாகுது
பொன்னான பொழுதுகள்
எண்ணாமல் கழித்தாலும்
மண்ணோடு போகும் தருணம்
மனம் வருந்தவே வேண்டும் நீ
இன்பச் சொல் கூறு - அடுத்தவர்க்கு
இன்முகத்தைக் காட்டு - முடிந்தவரை
துன்பப்படும் எவர்க்கும் ஓடிச்சென்று
துயர் துடைக்கப் பழகு
அடுத்தவர் மனங்களில்
விதைக்கின்ற நினைவுகளை
சிறப்பாக விதைத்து விடு
புற அழகை மெருகூட்டி
பேரழகாய்த் தெரிந்தாலும்
உள்ளத்து எண்ணங்களே
ஒப்பனை முகத்திற்கு
அப்பாலும் நின்று
உரித்தான முகத்தைக் காட்டும்
எண்ணிப்பார் மனிதா!
உலகமே அழிந்து - நீ
கடைசியாய் எஞ்சினால்
தனியொரு மனிதனாய்
தவிப்பாயோ? மாட்டாயோ?
எனது எனதென்று ஏனின்னும் அகந்தை
உயிரினங்கள் எல்லாமே
ஒருவனது குழந்தை
அடுத்தவரை நேசி
அன்பினால் எதையும் செய்
ஆணவம் ஒரு குப்பை
ஒதுக்கிவை அதனை
செழிக்கும் உன் வாழ்க்கை.
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment