Wednesday, 23 October 2013
காற்று வழி காதினிலே....(லண்டன் தமிழ் வானெலிக்காக எழுதிய கவிதை)
http://www.firstaudio.net/
காற்று...
உயிர்களின் வாழ்தலுக்கு ஆதாரம்
இல்லையெனில்
நிலவையே கூறுபோட்டு
மனிதன் கூறியிருப்பான் ஏலம்
உயிரினங்களில் பேதைமை
உடல் உறுப்புக்களில் கூட சிலருக்கு வஞ்சனை
ஆயினும் காற்றை மட்டும்
கடவுள் தந்தான் பொதுவில்
வெளியே உலவும் மட்டும் காற்று
உள்ளே சென்று விட்டால் மூச்சு
அது நின்று விட்டால் எல்லாமே போச்சு
இப்படியான காற்றிலே ஒலியை
கலந்து விட்டது வானொலி
இதனை கண்டுபிடித்து தந்தான்
மார்க் கோணி
சிந்தனைகளும் கவிகளும் செய்திகளும்
சொந்தப் பாடல்களோடு நல்ல கதைகளும்
வண்ணமிகு வார்த்தையாலங்களும்
எண்ணி எண்ணி சிரித்திட
நகைச்சுவை முத்துக்களும் என
நம் செவிக்கு விருந்தாகும்
நிகழ்ச்சிகள் ஏராளம்
கருத்து பகிர்விற்கு உதவியது மொழி
அதனை விரிபு படுத்தி செய்யுது வானொலி
புலம்பெயர் தேசங்களிலே
எமது மொழியை வாழவைப்பதும் வானொலிகளே
அதிலும்
செம்மை மொழியாம் தமிழ் மொழியை
அடுத்த எமது தலைமுறைக்கும்
எடுத்துச் செல்லுது எமது
லண்டன் தமிழ் வானொலி
வானலைகளின் ஊடே வருவதெல்லாம் இன்பமா இல்லை
வானொலியிலே நாம் கேட்பதெல்லாம் இன்பமா
இல்லவே இல்லை....
சான்றோர் சிந்தனையில் ஊற்றெடுத்து
கலையகத்திலே உருவெடுத்து
காற்றுவழி காதினிலே
நம்மை வந்து சேரும்
நல்ல தமிழ்ச் செல்வம்
அதுவே செவிக்குள் பாயும் இன்பம்.
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment