Monday, 28 October 2013
பொய் இல்லாத பொய்கள்
அழகு தமிழை ஆராதிக்கும்
கவிதை கொண்ட கருவில்
மழலைக் கொஞ்சலில் மதியை மயக்கும்
சில வஞ்சகர் காட்டும் அன்பில்
பழிக்கு அஞ்சா பாதகர்கள் தம்மை
வெளிக்குக் காட்ட போடும் வேடத்தில்
கண்ணுக்குத் தெரியாமல் உள்ளுக்குள் இருக்கும்
பொய் இல்லாத பொய்கள்
அவதாரம் எடுத்தனராம்
அரக்கர்களை அழித்தனராமென
கதைகளில் மட்டுமே காக்கின்ற கடவுள்கள்
முற்றிப்போன சிலரை ஏமாற்றிப் பிழைக்க
கடவுளின் பெயரால் நடக்கின்ற கூத்துக்கள்
கிடைக்காத வெண்ணெய்க்காய்
கடைகின்ற மத்துக்களாய்
நடக்காத ஒன்றுக்காய்
துடிக்கின்ற ஆசைகள்
விளையாட்டாய்ச் சொன்னாலும் உண்மையே
பொய் இல்லாத பொய்கள் இவைகளே
எல்லாம் மாயை என்றவர் கூற்றே
எங்கினும் காண்கினும் தென்படும் உண்மை
வாழ்க்கை பொய்யே வனப்பும் பொய்யே
யாக்கை பொய்யே யவனம் பொய்யே
சேர்க்கை பொய்யே செயலும் பொய்யே
தீர்க்கமாய்த் தெரியும் இவை
பொய் இல்லாத பொய்களே.
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அழகிய கவிதை....
அருமை....
வணக்கம்
மனதை தொட்ட கவிதை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி நண்பர்களே.
Post a Comment