Thursday, 24 October 2013

நாம் ஒன்று நினைக்க...




நாம் ஒன்று நினைக்க
வேறொன்று நடக்குமென்று 
அனுபவத்தில் கண்டு கொண்டேன்
அதனை இங்கு சொல்லவந்தேன்

வாழ்க்கை என்னும் கொடிமரத்தில்
ஏற்றி வைத்த ஆசைகளே
காற்றில் மெல்ல படபடத்தே
பறந்துபோகும் கையை விட்டே

நேற்று வரைக்கும் நெஞ்சுக்குள்ளே 
தேக்கிவைத்த எண்ணங்களே
காட்சி மாற கதையும் மாற 
சுட்டெரிக்கும் துன்பங்களே 

பாதை ஒன்றைத் தேர்ந்தெடுத்து 
பயணம் செல்லும் போதினிலே 
பாழும் விதியின் வேட்க்கையினால்
தீதே மட்டும் விளைவாகி 
ஏதோ ஒன்றில் முடிந்துவிடும்

எண்ணிய இலக்குகள் தவறிவிட
சென்றடைந்த தூரங்கள் வேறாக
நடந்துவிடும் நினைத்ததற்கு மாறாக

தான் நடத்தும் நாடகத்தில்
எழுதிவைத்தான் இறைவன் முடிவுகளை
கதையை மாற்ற எத்தனிக்கும்
நடிக்க வந்த பாத்திரங்கள்

இலவு காத்த கிளியென   
ஏங்கும் நிலை மானிடத்தில்
இந்த உண்மையை உணர்ந்து கொண்டால்
மறைந்துபோகும் துன்பங்களே.


No comments:

Post a Comment