Thursday, 31 October 2013
அடங்குமோ என்றேனும்
ஒருமுறை இழுப்போமென்று
பழகிய பழக்கமின்று
வழக்கமாய் ஆனதால் அதை
வழியனுப்ப முடியாமல்
வெளிவிடுகிறது புகைதனைச் சிகரட்
உண்மையிலும் உண்மையே
ஒரு முனையில் நெருப்பும்
மறு முனையில் முட்டாள் வாயுமென்று
வழிமொழிந்த அறிஞர் உரையது
இழுத்து விட்ட புகையினிலே
இருளாய்த் தெரிவது
எதிர்காலம் கூடத்தான்
நோய் வந்து தாக்கியபின்
நோபட்டு அழுதாலும் பயனில்லை - நாமும்
தீயிட்டு அழித்திட்ட வாழ்வுதனை
புன்னகை தொலைந்த உதடுகளில்
புகையிலையின் நாற்றம்
அண்மையில் சென்று அளவளாவ
அடுத்தவர்க்குக் குமட்டும்
கறுக்கும் உதடுகள் கெடுக்கும்
முகத்தின் செழிப்புதனை
கடைசிக்காலம் முழுதும்
கழியும் இருமலிலே
ஊதி ஊதித் தள்ளியதில்
உருப்படியாய் நடந்ததென்ன?
உடல் நலத்திற்கும் கேடு
நலமிக்க சுவாசத்திற்கும் கேடு
உருவமில்லா உயிர்
இங்கேதான் போகிறது புகைவடிவில்
இருந்தும் ஏனோ
இன்னும் புகைக்கின்றார்
விளைவு தெரிந்தவரும்
தமக்கும் கேடாக்கி
தம்மை அண்டியவர்க்கும் தீதாக்கி
விடுக்கும் புகையிது
அடங்குமோ என்றேனும்
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?
thanks boss.
நல்லதொரு எச்சரிக்கை கவிதை....
வாழ்த்துக்கள்...
தீபாவளி நல்வாழ்த்துக்கள்....
Post a Comment