Friday, 25 October 2013
ஓட்டம் ஓட்டம்
ஓட்டப் பந்தயம்
ஓடுபவர்கள் எல்லோருமே வெல்லமுடியாது
வாழ்க்கைப் பந்தயம்
ஓடினால் மட்டுமே வெல்லமுடியும்
விஞ்ஞான வளர்ச்சியில் வேகமெடுக்குது உலகம்
ஈடுகொடுத்து நாம்வாழ எடுக்கவேண்டும் ஓட்டம்
அன்றேல் வேடிக்கைபார்க்கும் கூட்டத்தில்
வீணே கழியும் காலம்
ஓடி ஓடிப் படிக்கவேண்டும் - நாளும்
புதிது புதிதாய் அறியவேண்டும்
இன்று நான் அறிந்தது அதிகம்
நேற்றெனக்கு தெரிந்ததை விட
என்று தினமும் உணரும்வண்ணம் படிக்கவேண்டும்
காலத்தின் ஓட்டமதை கடிகாரம் காட்டும்
கடிகாரவோட்டம் கழியும் நாட்களைக் காட்டும்
எண்ணிய கருமம் விரைந்து கைகூட
நினைத்தபடி எல்லாம் நன்றெனவே நடக்க
காலத்தை முந்தி ஓடவேண்டும் ஓட்டம்
ஆசைகள் மனதுக்குள் அடங்கிவிடக் கூடாது
சாதிக்க நினைப்பவர்கள் ஓட்டத்தை நிறுத்திவிடக் கூடாது
மனதும் உடலும் களைத்துப் போகலாம்
உணர்வினில் உதிரத்தில் ஓய்வில்லாத ஓட்டம்வேண்டும்
கனவுகள் நனவாக லட்சியம் கைகூட
நேரத்தை வென்று ஓடவேண்டும் ஓட்டம்
வரலாறு போற்றும் வெற்றிகளைக் காட்டும்.
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment