Tuesday 4 October 2011

வர்ணம் ஆயிரம்




மொட்டுக்குள் ஒளிந்திருக்கும் பூவின் வர்ணம்
பாட்டுக்குள் இழைந்திருக்கும் வார்த்தை வர்ணம்
கட்டுக்குள் அகப்படாத கற்பனை வர்ணம்
ஏட்டுக்குள் எழுத்திற்குள் எத்தனை வர்ணம்
வர்ணம் ஆயிரம்

இப்படி வர்ணம் ஆயிரம்

அன்னையின் வார்ப்பிலே மழலையின் வர்ணம்
அவள்தரும் அன்பிலே சேர்திடும் வர்ணம்
கன்னியின் எண்ணத்தில் எத்தனை வர்ணம்
கடைவிழிப் பார்வையில் தோற்றிடும் வர்ணம்
வர்ணம் ஆயிரம்

இப்படி வர்ணம் ஆயிரம்

மனிதரின் பார்வையில் பிரிந்திடும் வர்ணம்
மரணமும் நேர்கையில் தெரிந்திடும் வர்ணம்
கண்ணுக்குப் புலப்படாத மாந்தரின் வர்ணம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட வர்ணம்
வர்ணம் ஆயிரம்

இப்படி வர்ணம் ஆயிரம்

நிறம் எழுத்து குணம் புகழ்
இவை எல்லாம் வர்ணத்தின் அர்த்தங்கள்
ஐம்புலன் உணரும் வர்ணம் ஆயிரம்
ஆயினும் மனமே

வேண்டிடு மனிதம்

No comments:

Post a Comment