Saturday 15 October 2011

சிந்தித்தால் சிரிப்புவரும்

ஒன்று ஒன்று என்று ஏங்கும் - மனம்
ஒன்றுமே இல்லாத போது

இன்னும் ஒன்று கிடைத்தால்
நல்லதென  ஏங்கும்
அந்த ஒன்று கிடைத்த போது

நடக்கும் போது ஓட நினைக்கும்
ஓடும் போது பறக்கத் துடிக்கும்
அடுத்தது அடுத்தது என்றே திரிந்து
இருப்பதைத் தொலைத்து நிற்கும்

கொண்டதில் கொள்வதில்லை திருப்தி – எதுவும்
நன்மைக்கே என்று அடைவதில்லை நிம்மதி

இழந்த அமைதி தொடர்ந்து வர
அலையும் மனது கடைசிவரை
கனவுகளில் மிதந்து

போதும் என்ற மனது பாரிலில்லை
பொருந்தாத ஆசைகளுக்கோ குறைவில்லை
நன்மைக்கும் தீமைக்கும் பேதைமைகள் புரிவதில்லை
ஏக்கத்தில் தவிப்பது இதற்கொன்றும் புதிதில்லை

புத்தி உணர்ந்து தெளிந்தாலும்
பித்துப் பிடித்தலையும் பிடிவாதமாய்
விந்தையான மனது இதனை
சிந்தித்தால் சிரிப்பு வரும்

No comments:

Post a Comment